districts

img

பிரியாணி சமையல் கூடத்திற்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

திருவள்ளூர்,செப்.20-  திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் பிரியாணி கடையின் சமையல் கூடம் இயங்கி வருகிறது. இந்த பிரியாணி கடைக்கு சென்னையின் பிற பகுதியில் 10 இடங்களில்  கிளைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அப்பு என்பவர் இந்த பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில்  பிரி யாணி தரமற்ற முறையில் இருப்பதாகவும், சமைய லறை உள்ளிட்ட பகுதிகள்  சுகாதாரமற்ற இருப்பதாக வும் தொடர்ந்து பல்வேறு புகார்கள் இந்த கடை மீது  கூறப்பட்டு வந்தது. தொடர்ந்து வந்த புகார் களின் அடிப்படையில் வியா ழனன்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெயதீஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் ஆகியோர் தலைமையில் வந்த உணவு பாதுகாப்பு துறையினர் சமையல் கூடத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுகாதார மற்ற முறையில் சமைய லறை இருப்பதும், தரமற்ற  உணவுகள் வழங்கப்படு வதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சமையல் கூடத்தை பூட்டி சீல் வைக்க அதிகாரிகள் முயன்றனர். அப்போது கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உணவு  பாதுகாப்புத்துறை அதி காரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரியாணி செய்து வைத்திருந்த பிரியாணி டபராக்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை சாலை நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலையில் சமை யல் பாத்திரங்களுடன் போராட்டம் நடத்தியவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து போலீசாரின் பாதுகாப்புடன் அந்த சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்த னர்.