திருவண்ணாமலை மாவட்டம்,பெரணமல்லூர் பேரூராட்சி காந்தி நகரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியேற்று விழாவிற்கு பேரூராட்சி கவுன்சிலர் மா.கௌதம் முத்து தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் கிருஷ்ணன் கொடியேற்றினார். செயலாளர் பெரணமல்லூர் சேகரன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.