மருத்துவர் எஸ்.காசியின் தாயார் மனோன்மணி சண்முகத்தின் முதலாமாண்டு நினைவேந்தல், ‘ஆத்தா - ஓர் அசாதாரணத் தாயின் கதை’ நூல் வெளியீட்டு நிகழ்வு வெள்ளியன்று (பிப்.14) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். எழுத்தாளர் பேரா.அருணன், மருத்துவர் முகம்மது சயீ, மருத்துவர் ச.காசி, ச.வீரப்பன், ச.தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.