நாடாளுமன்ற தேர்தல் நிதியாக திருவள்ளூர் மாவட்டக்குழு சார்பில் முதல் தவணையாக ரூ 3. லட்சத்திற்கான காசோலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் செவ்வாயன்று (பிப் 6), மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வழங்கினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 6 வழிச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி நல்லூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு கைதாகி காரனோடையில் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தபோது இந்த நிதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.