districts

தொடர் வழிபறி லாரி ஓட்டுநர்கள் அச்சம்

பொன்னேரி,ஆக.6-

      மீஞ்சூர் பகுதியை சுற்றியுள்ள அத்திப்பட்டு,  வல்லூர், கொண்டக்கரை, காட்டுப்பள்ளி, வடசென்னை, உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிலும், அனல் மின் நிலையங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, இந்தியன் ஆயில் நிறுவ னம், துறைமுகம், நிலக்கரி முனையம் தனியார் தொழிற் சாலைகள், நிறுவனங்கள் உள்ளன. இதனால் தினந் தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணலி சாலை, வண்டலூர் சாலை, பொன் னேரி சாலை, எண்ணூர் கடற்கரை சாலை வழியாக பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றன.

     எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை களில், நீண்ட தூரத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சாலையின் ஓரத்தில் டிரைவர்கள் நிறுத்தி சமையல் செய்து  சாப்பிட்டும், ஓய்வெடுத் துக் செல்வது வழக்கம்.  இவ்வாறு சாலையின்  ஓரத்தில் நிற்கும் லாரிகள் குறிவைத்து மர்ம நபர்கள் லாரி ஓட்டுநர்களை கத்தி முனையில் மிரட்டியும் தாக்கியும் பணம் மற்றும்  விலை உயர்ந்த செல்போன் களை பறித்து செல்வது தொடர்ந்து நடந்து வருகி றது.  

    இந்நிலையில் அத்திப் பட்டு நிலக்கரி முனையத் தில், லோடுமேன் ஆக  வேலை செய்து வரும்  எண்ணூர் நெட்டுக்குப் பத்தை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் இரவு வேலை முடித்து விட்டு நடந்து வந்த போது மோட்டார் சைக்கி ளில் வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறிக்க  முயன்றனர்.

    இதை தடுக்க முயன்ற தால் பாலசந்தரை கொள்ளை கும்பல் கத்தி யால் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர் இதனால் மீஞ்சூரை சுற்றி யுள்ள பகுதிகளுக்கு வந்து செல்லவே லாரி ஓட்டுநர்கள் அச்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.