districts

img

நெல் அறுவடைக்கு ஆட்கள் பற்றாக்குறை விவசாயிகள் தவிப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.21- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, காவேரிப் பட்டினம் பகுதி யில் நெல் அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால், எந்திரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் இரண்டாம் போக அறுவடை நடந்துவரும் நிலையில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சிலர் வெளி மாவட்ட தொழி லாளர்களை அழைத்து வந்தும்,சிலர் தங்கள் வீட்டில் உள்ளவர்களை வைத்தும் அறுவடையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேறு வழியில்லாமல் இயந்திரம் மூலம் அறு வடை செய்யும் போது தானியங்கள் மற்றும் வைக்கோல் சேதம் அடை யும் என்பதையும் பொருட்படுத்தாமல் இயந்தி ரங்களை கொண்டும் அறு வடைசெய்து வருகின்றனர்.  ஒரே சமயத்தில் நெல் அறுவடைக்கு வருவதால் காவேரிப்பட்டணம், மலை யாண்டஅள்ளி, புதூர், கண்ணன் கொட்டாய், கொட்டாவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி களில் உள்ள இயந்திரங்க ளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இத னால் கடந்தாண்டை காட்டிலும் வாடகையும் அதிகரித்துள்ளது. அதிக வாடகை கொடுத்தும் இயந்திரங்கள் கிடைக்கா மல் நெல் சாகுபடி விவ சாயிகள் தவிக்கும் நிலை யும் ஏற்பட்டுள்ளது.