திருவள்ளூர், ஆக 18-
மெய்யூரில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனையை 23 ஆண்டுகளாக உரிய குடும்பத்திடம் ஒப்படைக்காததால் ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலு வலகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஆக.18) முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக் கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில் உள்ள பிற்படுத்த ப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் மிகவும் இட நெருக்கடியால், ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகின்றனர். இதனால் பாதிக் கப்பட்ட மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி வந்தனர். பல்வேறு போராட்டங் களுக்கு 2000 ஆம் ஆண்டில் 300 குடும் பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டது.
இருப்பினும் கடந்த 23 ஆண்டு களாக நிலத்தை அளந்து தரவில்லை. நிலத்தை அளந்து கல் நட வேண்டும் என வலியுறுத்திய போதெல்லாம் ஒதுக்கப்பட்ட நிலத்தில் முள் புதர்கள் மண்டி கிடக்கிறது அதனை சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் உத்தரவு போடுவதும், முட்புதர்களை அகற்றிய பிறகு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரி வித்தனர்.
இந்த நிலையில் வெள்ளியன்று (ஆக.18) ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் உரிய பதி லளிக்காததால், முற்றுகை போராட் டமாக மாறியது.
இதன் பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு, துணைத் தலைவர் மீனா பிரகாரம் ஆகி யோர் முட் புதர்களை அகற்றி தருவ தாக உறுதியளித்தனர். அதன் பிறகு 15 நாட்களுக்குள் வீட்டுமனைகளை அளந்து பயனாளிகளிடம் ஒப்படைக் கப்படும் என வட்டாட்சியர் வசந்தி எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் கே.விஜயகுமார் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில செய லாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட நிர்வாகிகள் ஜி.சம்பத்,பி.ரவி, ஆர்.தமிழ்அரசு, வட்ட நிர்வாகிகள் கே.முரு கன், டி.டில்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.