districts

img

ராணிப்பேட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு, நெல்  கொள்முதல் நிலையங்களை  தனியார் மயமாக்கும் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ராணிப்பேட்டையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ். கிட்டு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.