குடிநீருக்கும்,விலை நிலத்திற்கும் அபாயத்தை ஏற்படுத்தும் தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி,மாவட்ட துணை அமைப்பாளர் இரா.கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட தலைவர் டி.ஏழுமலை, அமைப்பாளர் ஏ.சுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகம், தேவேந்திரன், ஏழுமலை, முருகன், அய்யனார், பொன்.வெங்கடேசன், தெய்வீகன், அமாவாசை ஆகியோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தவிச மாவட்ட தலைவர் டி. கே. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள், சிபிஎம், சிபிஐ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ். கிட்டு தலைமையில் செவ்வாயன்று (நவ. 19) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, விதொச மாவட்ட தலைவர் டி.சந்திரன், ஆற்காடு வட்டார தலைவர் மதியழகன், கோதண்டன், தவிச கலவை வட்டார செயலாளர் வரதராஜன், சோளிங்கர் வட்டார செயலாளர் தாமோதரன், நிலவு குப்புசாமி, வாலாஜா வட்டார தலைவர் முனிரத்தினம், செயலாளர் பி. சேகர், ரேணு, கன்னிகாபுரம் தனபால், சேகர், விஜயா, பச்சையம்மாள், வாழைப்பந்தல் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், தலைவர் ஆர்.தாண்டவராயன், துணை செயலாளர்கள் எஸ்.வேல்மாறன், ஏ.நாகராஜன், விவிமு அரிகிருஷ்ணன், மாநிலகுழு எம்.ஐ.சகாபுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.