சிபிஎம் கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழுவிற்கு உட்பட்ட கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்:
மதுரவாயல் பகுதி
அயப்பாக்கம் - கி.சகிலா
91 முகப்பேர் மேற்கு (பெ) - எஸ்.சித்ரா
91 முகப்பேர் மேற்கு - பி.சுப்பிரமணி
92 முகப்பேர் கிழக்கு - எஸ்.மகாமுனி
144 எம்.எம்.டி.ஏ. - ஜாபர்சாதிக்
145 நெற்குன்றம் - சி.வி.தாமோதரன்
146 ராஜிவ்காந்தி நகர் - ஆர். ஜெய்சங்கர்
146ஏ ஸ்ரீலட்சுமி நகர் - ஜெ.பழனி
146பி ஐயப்பா நகர் - ஆர்.சிங்காரம்
147 சீமாத்தம்மன் நகர் - இ.சரவணன்
148 சிடிஎன் நகர் - எம்.முருகேசன்
149 வளசரவாக்கம் - ஜி. பார்த்தசாரதி
150 காரம்பாக்கம் - எம்.எஸ்.ராஜேந்திரன்
151 போரூர் லட்சுமி நகர் - எம்.ராஜா
153 போரூர் ஆர்.ஈ.நகர் - எஸ்.அருளானந்தன்
155 ராமாபுரம் - ஜி.சாந்தி
வானகரம் - ஜி.ஜெகந்நாதன்
நெற்குன்றம் பெ - எஸ்.விஜயலட்சுமி
பல்லாவரம் தொகுதி
அனகை - 1 - ஆர்.ஹேமக்குமார்
அனகை - 2 - எஸ்.மோகன்
அனகை - 3 - எஸ்.வெங்கட்
5 வது வார்டு - எஸ்.இப்ராஹிம்ஷா
14 வது வார்டு - சி.சக்திவேல்
15 வது வார்டு ஈஸ்வரி நகர் - டி.ஜோன்ஸ்மேரி
15 வது வார்டு - ஜி.குமரன்
15 வது வார்டு (பெ) - பி.கலைப்ரியா
15 வது வார்டு
மலங்கானந்த புரம் - எ.காண்ஸ்டன்
17 வது வார்டு (பெ) - டி.சிவகாமிசுந்தரி
21 வது வார்டு - சு.பழநிசாமி
24 வது வார்டு - கே.வி.பாஸ்கர்
28 வது வார்டு - என்.ஜானகிராமன்
31 வது வார்டு - ஜி.கமலக்கண்ணன்
36 வது வார்டு - வி.மாயவன்
விசேச கிளை - ஜி.ஜான்வில்லியம்ஸ்
திரிசூலம் 7 - பா.முரளி
திரிசூலம் (பெ) - ஆர்.சரளா
தாங்கல் - டி.ஸ்டாலின்
பொழிச்சலூர் - கே.சேதுராமன்
பம்மல் - டி.மலர்
திருநீர்மலை - எம்.இளங்கோவன்
அம்மன்நகர் - ஆர்.குமார்
சிபிஎம் கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் வருமாறு:
கடலூர் ஒன்றியம்
மேலழிஞ்சிப்பட்டு கிளை - எஸ்.ரவிக்குமார் .
நடுவீரப்பட்டு - டி.சேகர்.
சி.என்.பாளையம் - டி.நடராஜன்.
சி.என்.பாளையம் புறநகர் - ஏ.வீர கண்ணு.
கீரப்பாளையம் - ஆர்.ஐயப்பன்.
கே.என்.பேட்டை - இ.தயாளன்.
கே.என்.பேட்டை புது நகர் - எம்.பழனிவேல்.
பாதிரிக்குப்பம் ஏ - கே.சுரேஷ்குமார்.
பாதிரிகுப்பம் பி - ஜி.நீல நாராயணன்.
கூத்தப்பாக்கம் - டி.பொன்னுசாமி.
தூக்கராம்பாக்கம் ஏ - ஏ.கமலக்கண்ணன்
வடக்கு ராமாபுரம் - பி.சதிஷ்.
சான்றோர் பாளையம் - ஆர்.பன்னீர்செல்வம்.
சுத்துக்குளம் ஏ - ஏ.அறிவுக்கரசு.
பீமாராவ் நகர் - கே.செல்வி.
பச்சாங்குப்பம் - பி.பக்கிரி.
தொட்டி - ஏ.பாவாடை சாமி.
ரெட்டியார் பேட்டை - ஜி.சுந்தரமூர்த்தி.
பெரிய குப்பம் - பி.பாண்டியன்.
எஸ்.என்.நகர் - எம்.வெங்கடேசன்
சேடப்பாளையம் - கே.நவகோடி.
நாகம்மாள் பேட்டை - ஏ.வேல்முருகன்.
வண்டிக்குப்பம் - வி.சேட்டு.
வானமாதேவி - ஏ.தணிகாசலம்.
மனக்குப்பம் - என். திருநீலகண்டன்.
மேட்டூர் அணை 100 அடியை எட்டியது
சேலம், அக். 23 - காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்தது. இதனால், 29 நாள்களுக்கு பிறகு புதனன்று (அக்.23) நடப்பு ஆண்டில் 2-ஆவது முறையாக மீண்டும் நீர் மட்டம் 100 அடியாக உயர்ந்துள்ளது.
ரூ. 59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!
சென்னை, அக். 23 - கடந்த வாரம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை ரூ. 160 உயர்ந்து, ரூ. 58 ஆயிரத்து 400க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 58 ஆயிரத்து 720 ஆக உயர்ந்தது. கிராம் ரூ. 7 ஆயிரத்து 340-க்கு விற்பனையானது. அதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 7 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.
விவாகரத்து வழக்கில் தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக்கூடாது குடும்ப நல நீதிமன்றத்துக்கு உத்தரவு
சென்னை, அக். 23- விவாகரத்து வழக்குகளில் தம்பதியை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக்கூடாது என குடும்ப நல நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, கருத்து வேறுபாட்டால் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். அவர்களுக்கு விசா கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சென்னை வர முடியாததால் அமெரிக்காவில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இரு வரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜ ரானார்கள். இதை ஏற்க மறுத்த குடும்ப நல நீதிமன்றம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் எனக் கூறி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், வாக்குமூலம் பதிவு செய்ய குடும்ப நல நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து மனைவி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் புதனன்று (அக். 23) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்ற வழக்குகளில் மட்டுமே சம்பந்தப் பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் பிற வழக்குகள் குறிப்பாக விவாகரத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் காணொலிக் காட்சி மூலம் ஆஜராக வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், அவர்களை நேரில் ஆஜராக நிர்பந்திக்க கூடாது என்றும் குடும்ப நல நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய சுகாதார திட்ட செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு தர வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக். 23 - தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) மூலம் சுமார் 11 ஆயிரம் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேசிய சுகாதார திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு ஊதியம் கிடைக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம். மனு கிடைத்ததி லிருந்து 3 மாதத்தில் அரசு மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். விடுப்பு ஊதியம் பெற்ற செவிலியர்கள் குறை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் கணக்கீடு செய்து எஞ்சிய தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை, அக். 23- சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான நிறுவனங்க ளுக்கு தொடர்ச்சியாக இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.இது தொடர் பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்தார். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் பேசிய அவர், வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக் கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள் ளார். இதையடுத்து, உடனடி யாக வேளச்சேரி போலீ சாருக்கும், ரயில்வே போலீ சாருக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது. 3 மணி நேர நடத்தப்பட்ட தீவிர சோதனையில் வெடி குண்டு எதுவும் கண்டுபிடிக் கப்படவில்லை. இதை யடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும், மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர பேருந்து மோதி ஆட்டோ நொறுங்கியது: பயணிகள் படுகாயம்
சென்னை, அக்.23- சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில் செவ்வாயன்று ஆட்டோ ஒன்று பயணிகளுடன் எம்கேபி நகர் நார்த் அவென்யூ சாலை வழியாக அம்பேத்கர் கல்லூரி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, காரனோடையில் இருந்து பூக்கடை நோக்கிச் சென்ற மாநகர பேருந்து (தடம் எண் 57 எச்) கட்டுப்பாட்டை இழந்து இந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் அஜித் (28) மற்றும் அவருடன் வந்த பயணி ஒருவர் காயமடைந்தனர். மேலும் ஆட்டோவை பின்தொடர்ந்து வந்த ஒரு இருசக்கர வாகனம் மற்றும் மற்றொரு ஆட்டோ என இரண்டும் சேதமடைந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக். 25 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு, அக். 23- செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை(அக்.25) புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வெள்ளிக் கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தெரிவித்துள்ளார்.