கல்பாக்கம்,செப்.1- கல்பாக்கம் அணுசக்தி துறையில் நிரந்தர மற்றும் தொடர்ச்சியான பணிகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய கோரி சிஐடியு சார்பில் நடைபெற்ற சுற்றுவட்டார இளைஞர்களின் வாழ்வுரிமை மற்றும் லஞ்ச ஒழிப்பு மாநாடு புதனன்று (ஆக.30) நடைபெற்றது. கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் லேபர் யூனியன் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு செயல் தலைவர் கே.பழனிச் சாமி தலைமை தாங்கினார். வி.வடிவேலு வர வேற்றார். மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் எம்.கலைச் செல்வி மாவட்ட நிர்வாகிகள் சி.செல்வக் குமார் ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து முன்னாள் சட்டமன்ற உறுப்பி னரும், சிஐடியு மாநில செயலாளருமான எஸ்.கே.மகேந்திரன் பேசினார். கோரிக்கைகள் சுற்றுபுற கிராம சபை நிறைவேற்றிய தீர்மானத்தை கல்பாக்கம் அணுசக்தி துறை செயல்படுத்த வேண்டும், உடனடி தீர்வாக கிங்காஸ் தொழிலாள கூட்டுறவு சேவை சங்கத்தை விரிவுபடுத்த வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், இஎஸ்ஐ, இபிஎப் உள்ளிட்ட சட்ட உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் சங்கத்தின் கவுரவத் தலைவராக சு.வெங்கடேசன், தலைவராக இ.சங்கர், செயல் தலைவராக கே.பழனிச்சாமி, பொதுச்செயலாளராக க.பகத்சிங் தாஸ், பொருளாளராக வேதநாயகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.