விழுப்புரம், ஆக.10- தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (ஆக.10) விழுப்புரம் என். சங்கரய்யா நகரில் நடை பெற்றது. வரவேற்பு குழு செயலாளர் எஸ். முத்துக்குமரன் வரவேற்றார் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.சத்திய நாராயணன், மாநில பொதுச் செயலாளர் ஜி.விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய சம்மேளனத் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர் கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டு வரவேற்பு குழு புரவலர் மருத்து வர் எஸ்.ரவீந்திரன், இணை புரவலர்கள் மருத்துவர்கள் திருமாவளவன், பழனிராஜ், செல்வராஜ், சௌந்தரராஜன், மொத்த மருந்து மற்றும் சில்லறை மருந்து விற்பனை யாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சின்னையா, குறிஞ்சி வளவன், முத்து சரவணன், முத்து ராமச்சந்திரன், ஹைதர் அலி, குணா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பொதுக்குழுவில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், பொதுத்துறை மருந்து மற்றும் தடுப்பூசி நிறுவனங்க ளுக்கு போதிய நிதி வழங்கி மறுசீரமைக்க வேண்டும், உள்நாட்டு உற்பத்தியில் 5 பொது சுகாதாரத்திற்கு செலவிடவேண்டும். ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ 26,000 மற்றும் அக விலைப்படி வழங்க வேண்டும். அடிப்படை சமூக பாதுகாப்பு உரிமைகள் பி.எப், இஎஸ்ஐ போனஸ் போன்றவற்றை அனைத்து மருத்துவ நிறுவனங்களும் வழங்க வேண்டும். மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிக ளுக்கு முத்தரப்பு குழுவை உடனடியாக கூட்டி நிலையான வேலை வரையறை விதிகளை ஒன்றிய அரசு நிர்ணயிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.