districts

img

70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்குக

கடலூர் அக்.2- மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதிய சங்கங்களில் ஒருங்கிணைப்பு குழு சார்பாக உலக மூத்த குடிமக்கள் பாதுகாப்பு தினம் கடலூரில் கொண்டாடப் பட்டது.  நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் டி. புருஷோத்தமன் தலைமை தாங்கினார். என்.காசிநாதன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செயலாளர் ஆர்.மனோகரன் துவக்க உரையாற்றினார். போக்குவரத்து சங்கத்தின் ஜி. பாஸ்கரன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் சங்கத்தில் சீத்தாராமன், அரசு ஊழியர் சங்கத்தின்  டி.ரவிச்சந்திரன், அகில பாரத மூத்த குடிமக்கள் பென்சனர் கூட்ட மைப்பின் சி.ராமசாமி, குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதிய சங்கத்தின் தேவராஜ், ஏ. கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதிய சங்கத்தின் ஆதவன், பிஎஸ்என்எல் ஓய்வூதிய சங்கத்தின் மதி யழகன், அரசு ஊழியர்கள் ஓய்வுதியர் சங்கத்தின் ஜி. பழனி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு பேசினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல். அரிகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். வங்கி ஓய்வூதிய சங்கத்தின் எம். மருதவாணன் நிறைவுரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகை வழங்க வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும், 70 வயது நிறைவடைந்தவர்களுக்கு 10 சதம கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கம்யூடேசன் பிடித்த காலம் 12 ஆண்டாக குறைக்க வேண்டும், சத்து ணவு, அங்கன்வாடி உள்ளிட்ட தொகுப்பு ஊதிய ஓய்வூதியர்களுக்கு இபிஎப் 95 ஓய்வூதியர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வையும் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். தொலைதொடர்பு, வங்கி ஓய்வூதியர்களுக்கு முறையான ஊதிய ஒப்பந்தம் அமல்படுத்திட வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 95 மாத அகவிலைப்படி உடனே வழங்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய ஓய்வுதிகளுக்கு விடுபட்ட அகவிலைப்படைய வழங்கிட வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளைப் போக்கிட வேண்டும். ஓய்வூதியத்தின் மீதான வருமான வரி பிடித்தலை கைவிடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்  கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன. கூட்டமைப்பின் சி.குழந்தைவேலு நன்றி கூறினார்.