புதுச்சேரி, ஆக.19- மின் விபத்தை தடுக்க புதுச்சேரி அரசு மின் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அரசு மின் துறையில் ஊழி யர்கள் பற்றாக்குறையால் தினந்தோறும் மின்விபத்து ஏற்பட்டுவருகிறது.மின் விபத்தை தடுக்க மின்துறையில் காலி யாக உள்ள 850 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சமீபத்தில் மின் விபத்தால் உயி ரிழந்தவர்களின் ஊழியர்களின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் தணிகாசலம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் ராமசாமி, தணிகைவேலன், ரவிச்சந்திரன்,உத்திராடம், பரத்குமார், திருமூர்த்தி, முருகன், சரவணன்,கண்ணன் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.