செங்கல்பட்டு, ஜன. 2 - தொழிலாளர்களை ஊனமாக்கும் தரமற்ற பிஎஸ்சி மின் கம்பங்களை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அமைப்பின் செங்கல் ்பட்டு மின் திட்டத்தின்16ஆவது ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஜன.2) தோழர்கள் பஞ்சரத்தி னம், முனிவேல் நினைவரங்கத் ்தில் (செங்கல்பட்டில்) நடை பெற்றது. இந்தப்பேரவையில், வாரியத்தில் கடந்த காலத்தில் பயன்படுத்திய ஆர்இஇ மின் கம்பங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், காலிப்ப ணியிடங்களை நிரப்பி களப் பணியாளர்கள், பொறியாளர்கள், தொழிலாளர்களின் வேலை பளுவை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரவைக்கு திட்டத் தலைவர் வி.தேவக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வி.செல்லப்பன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மறைமலை நகர் கோட்ட செயலாளர் எ.சிவக்குமார் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். அச்சிறுப் ்பாக்கம் கோட்ட செயலாளர் ஜி.தீனதயாளன் வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ் துவக்கிவைத்து பேசினார்.
செங்கல்பட்டு மின்திட்ட செயலாளர் என்.பால்ராஜ் வேலை அறிக்கையும் பொருளாளர் எம். வெங்கடேசன் வரவு செலவு அறிக்கையும் சமர்பித்தனர். சென்னை மண்டல செயலாளர் எ.முருகானந்தம், மாநில செயலாளார் டி.ஸ்ரீதர், தென் சென்னை திட்ட செயலாளர்கள் டி.அன்பழகன், டி.பண்டாரம் பிள்ளை உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி எம். கலைச் செல்வி, பொறியாளர் அமைப்பு திட்ட செயலாளர் எம்.மயில்வாகனன், ஓய்வு பெற்றோர் அமைப்பு செயலாளர் சி.வேம்பு ஆகியோர் பேசினர். அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நிறைவுரை யாற்றினார்.
நிர்வாகிகள்
அமைப்பின் திட்டத் தலைவராக என்.பால்ராஜ், செயலாளர் வி.தேவக்குமார், பொருளாளர் ஜி.தீனதயாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.