வடசென்னை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கலாநிதி வீராசாமியின் தேர்தல் பணிகளுக்காக மணலியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் திறந்து வைத்தார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், பகுதி செயலாளர் டி.பாபு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.