districts

img

தூய்மை பணியாளர் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் முயற்சிக்கு சிஐடியு கடும் எதிர்ப்பு

திருப்பத்தூர், டிச.1- திருப்பத்தூர் நகரம் 36-வது வார்டுக்கு உட்பட்ட டிஎம்சி காலனியில் தூய்மை பணியாற்றும் அருந்ததியர் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலா னவர்கள்  ஒப்பந்த தொழி லாளர்கள், அடிப்படையில் 30 பேர் நிரந்தர தொழி லாளர்கள்.  இந்த மக்கள் வசிக்கும் பகுதியை அழகுபடுத்து வதாக கூறிய நகராட்சி நிர்வாகம், கடந்த ஆண்டு  நவ. 8 அன்றுஅனைத்து தொழிலாளர்களின் வீடு களுக்கு நோட்டீஸ் வழங்கி யது. இதையடுத்து அனைத்து தொழி லாளர்களும் கடந்த  டிச. 15 அன்று வட்டாட்சியர் அலு வலகம் முன்பும், கடந்த ஜனவரி 24 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாற்று இடம் வழங்குவதாக  அதிகாரிகள் வாக்குறுதி யளித்தனர். அதன்படி, போராட்டத்தை கைவிட்ட னர். மாவட்ட நிர்வாகம் தரப்பில் தற்போது ஒதுக்கப் பட்ட இடம் திருப்பத்தூர் நக ரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது நகரின் தூய்மை பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத் தும் மற்றும் அந்த மக்களின் பொருளாதாரமும், பிள்ளை களின் கல்வி கேள்விக்குறி யாகும் என்பதால் டிஎம்சி  காலனி இடத்தை அப்புறப் படுத்த எதிர்ப்பு தெரிவித்த னர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மீண்டும் தூய்மைப் பணியாளர்கள் வீடுகளை காலி செய்ய மீண்டும் நோட்டீஸ் ஒட்டும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளது. நகராட்சி நிர்வாகத்தின்  இச்செயலை கண்டித்து சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருப்பத் தூரில் சிஐடியு நகர அமைப்பாளர் சி.கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பொன்னுசாமி, சின்னண் ணன், ரங்கன், ஜோதி, ரவி, காமராஜ், வீரபத்திரன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் துவக்கி வைத்தும், ஊரக வளர்ச்சி துறை மாவட்ட தலைவர் எம்.காசி நிறைவு செய்தும் பேசினர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச்  செயலாளர் குபேந்திரன், சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் எம்.காசி, மாவட்டக்குழு உறுப்பி னர் டி.ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.