districts

img

தமிழ்நாட்டை இருட்டில் தவிக்கவிட அதிகாரிகள் திட்டமா

பொன்னேரி, ஆக.11

      தமிழ்நாட்டை இருட்டில் தவிக்க விட வல்லுரில் உள்ள தேசிய அனல்மின்  உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு எனர்ஜி கம்பெனியில் பணிபுரியும் (NTECL), அதிகாரிகள் திட்டமா? என சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது.  

     தேசிய அனல் மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு எனர்ஜி கம்பெனி (என்டிஇசிஎல்),  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள வல்லூரில்  2008 ஆம் ஆண்டு அனல்  மின் நிலையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கி, 2013ல்  உற்பத்தி தொடங்கியது. இதில் ஒன்றிய அரசின்  தேசிய அனல் மின் கழகம் 50 விழுக்காடு  பங்குகள்,  தமிழ்நாடு மின்வாரியம் 50 விழுக்காடு பங்குகள் வைத்துள்ளன. இங்கு 1500 மெகாவாட் மின்திறன் கொண்ட அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

     இந்த அனல் மின் நிலையத்தின் மூலம் உற்பத்தியாகும் 70 சத மின்சாரம் தமிழகத்திற்கும் மீதமுள்ள  மின்சாரம் புதுச்சேரிக்கும், தெலுங் கானா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படு கிறது. சென்ற ஆண்டில் மட்டும் 792 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் தேசிய அனல்மின் உற்பத்தி கழகம் 4925 கோடி ருபாய் வருமானம் ஈட்டியது. லாபம்  மட்டும் ரூ.642 கோடி ரூபாய் ஆகும்.

      இந்த அனல் மின்நிலையத்தில் நிர்வாகப் பணிகள் மற்றும் அதிகாரி கள் முழுவதும் மத்திய அரசின் தேசிய  அனல் மின் கழகத்தைச் சேர்ந்தவர்கள்.  அவர்களுக்கு தேசிய அனல் மின் கழக  நிறுவனத்தின் ஊதியம் குடியிருப்பு என்று அனைத்து வசதிகளும் உள்ளது.

    உற்பத்தியில் ஈடுபடும் 2012 தொழி லாளர்களும் பொறியாளர் உட்பட ஒப்பந்த முறையில் பணியாற்றக் கூடியவர்கள். அரசின் குறைந்தபட்ச ஊதியம் கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படுகின்றது.வேறு எந்த வசதியும் இல்லை. தேசிய அனல் மின் கம்பத்தில் பணிபுரியும் 300  அதி காரிகளுக்கு ஆண்டுக்கு 104 கோடி ரூபாய் செலவு செய்யும் நிர்வாகம்,  2012 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வெறும் 48 கோடி ரூபாய் மட்டும் ஆண்டுக்கு செலவழிக்கிறது.  

சிஐடியு வேண்டுகோள்

      இதுகுறித்து சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் கூறு்கையில், ஒப்பந்த முறையில் தொழி லாளர்களை வேலை வாங்கக் கூடாது என்று தமிழக அரசின் தொழிலாளர் துறை உத்தரவு போட்டும் அதை மதிக்காமல் மத்திய அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஒப்பந்தமுறை மூலம் தொழிலாளர்களிடம் வேலை வாங்கி வருகிறார்கள்.  

     480 நாட்கள் பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு நிரந்தரத்திற்கான உத்தரவினை வழங்க வேண்டும் தமிழக அரசின் நிரந்தரப்படுத்துதல் சட்டம் 1981ன்படி தொழிற்சாலைத் துறை அதிகாரியிடம் வழக்கு நடந்து வருகிறது.

    ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வேலை வாங்க தமிழகத்தில் உரிமம் இல்லாத நிலையில் மத்திய பிரதேசத்திலிருந்து ஒரு ஒப்பந்தக்காரரரை கொண்டு வந்து சாம்பல் கையாளும் ஒரு பகுதியை அவுட்சோர்சிங் விட முயற்சிக்கிறார்கள். அதை கைவிட வேண்டும்

    இதுகுறித்து தொழிலாளர் துணை  ஆணையாளர் முன்பு  தவா நடைபெற்று  வருகிறது. ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதால், தமிழகத்திற்கான மின் சாரம் குறைந்து பற்றாக்குறையால் அவதிப்படும் நிலை ஏற்படும். இது குறித்து எவ்வித கவலையும் இல்லா மல் தேசிய அனல் மின்கழகத்தின் நிர்வாகம் இருக்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது. தமிழக அரசானது இதில் உடனடியாக தலை யிட்டு தொழிலாளர்களின் பிரச்சினை களை தீர்த்து வைக்க வேண்டும்  என்று விஜயன் கேட்டுக் கொண்டார்.