காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பதற்காக சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட குழுவின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ப. சு. பாரதி அண்ணா தேர்தல் நிதி ரூ.2 லட்சத்தை மூத்த தலைவர் அ.சவுந்தரராசனிடம் வழங்கினார். மாநில குழு உறுப்பினர் எ.ஆறுமுக நயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .