ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் இடம் மற்றும் பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி புதனன்று (ஆக.23) ஆய்வு செய்தார். வாலாஜா நகராட்சியில் உணவு தயாரிக்கும் சமையல் கூடம், அனந்தலை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சமையல் கூடம், ஆற்காடு நகராட்சியில் உணவு தயாரிக்கும் கூடம், திமிரி பேரூராட்சி தொடக்கப்பள்ளி சமையல் கூடம் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி ஆணையர், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.