districts

img

பீடி தொழிலாளர்களுக்கு இலவச பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி

திருவள்ளூர், மார்ச் 16- பீடி தொழிலாளர் களுக்கு இலவச பட்டா,   மார்ச் 30 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததால் காத்திருக்கும் போராட்டம்,  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. திருவள்ளூர் அருகில் உள்ள மெய்யூர் மற்றும் ஊத்துக்கோட்டையில் கிழக்கு, மேற்குகாவாங் கரை பகுதிகளில் குடி யிருக்கும் பீடி சுற்றும் தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காலம்கால மாக பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மிக வும் குறைந்த கூலி என்பதால்  வறுமையில் வாடுகின்றனர். சொந்தமாக வீட்டுமனை இல்லாததால், வாடகை வீட்டில் குடியிருந்து வரு கின்றனர். இந்த சூழலில் 2015ஆம் ஆண்டு முதல் இலவச வீட்டு மனைகள் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி செங்கை மாவட்ட பீடித் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 10 ஆண்டுகால போராடி வரு கின்றனர். மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் காத்திருக்கும் போராட்டம்,  ஆர்ப்பாட்டம் என பல வடிவங்களில் போராட்டம் நடைபெற்று வந்தது.  அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் செங்கல் பட்டு பீடி தொழிலாளர் சங்கம் (சிஐடியு), சார்பில்  ஊத்துக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (மார்ச் 15), காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டு இருந்தனர்.  இந்த சூழலில் ஊத்துக் கோட்டை வட்டாட்சியர் மதன் தலைவர்களை அழைத்து மார்ச் 14 அன்று  வட்டாட்சியர் அலுவலகத் தில் பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது மார்ச் 30ஆம் தேதிக்குள் தகுதி யான அனைவருக்கும் இலவச குடிமனை பட்டா  வழங்கப்படும் எழுத்துப்  பூர்வமாக உறுதி அளித்த தால் வெள்ளியன்று நடக்க இருந்த காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தை யில் செங்கை மாவட்ட பீடித் தொழிலாளர்கள்   சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஆர்.பலராமன்,  மாவட்டச் செயலாளர் எம்.கே.முருகன், மாவட்ட துணைத் தலைவர் குப்பு ராஜ், மாவட்ட துணைச்  செயலாளர் டி.டில்லி,  மாவட்ட குழு உறுப்பினர் கள் சலீம், சரளா, சீனிவா சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.