அம்பத்தூர், ஆக. 11-
பூந்தமல்லி அருகே மின்சார வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கி ளுடன் விழுந்ததில் வாலிபர் பலியானார். உடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் படப்பை காடு மதுக்கூர் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ராம குணா (22). இவரது நண்பர் மதிவாணன் (24). இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இருவரும் வியாழக்கிழமை இரவு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது குமணன் சாவடியில் இருந்து வேலப்பன்சா வடி செல்லும் நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி மின் வாரியம் சார்பில் கேபிள் பதிக்க தோண்டப்பட்ட 6 அடி பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்தனர்.
அப்போது பள்ளத்தில் சிமெண்ட் தளம் அமைக்க கட்டப்பட்ட இரும்பு ராடுகளால் இருவரும் காயம் அடைந்த னர். உடனடியாக இருவரையும் காப்பாற்ற பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் பள்ளம் ஆழமாக இருந்ததால் அதில் குதித்து உடனடியாக காப்பாற்ற முடியவில்லை. உடனே அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து பள்ளத்தில் இறங்கிய போது ராமகுணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். பலத்த காயமடைந்த மதிவாணனை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ராமகுனா உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.