கடலூர் மாவட்டம், பண்ருட்டி அங்கு செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை கையகப்படுத்தி நிலம் இல்லாத தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பண்ருட்டி வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து, பட்டியலின மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.