districts

img

மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வாலஸ் மருந்து நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே தென் சென்னை மாவட்டத் தலைவர் வாசுதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய சம்மேளனத் தலைவர் ரமேஷ் சுந்தர், மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி, வாலஸ் கவுன்சில் மண்டல அமைப்பாளர் ஆர்.முரளி, சிஐடியு மாநில குழு உறுப்பினர் சு.லெனின் சுந்தர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.