சென்னை, ஜூலை 23 - பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலை கண்டித்து ஆக.6 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது. ஒருமைப்பாட்டுக் கழகத்தின் கூட்டம் திங்களன்று (ஜூலை 22) சென்னையில் மாநில கவுரவத் தலைவரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஏ.கோபண்ணா தலைமையில் நடை பெற்றது. அமைப்பின் மாநில பொதுச் செயலாளர்கள் ஐ. ஆறுமுக நயினார், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், பேரா. வி.பி. ஆத்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தில், இஸ்ரேலின் யூத மதவாத மற்றும் இனவெறி அரசு பாலஸ்தீனத்தின் மீது இனஅழிப்பு போரை நடத்தி வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இஸ்ரேலின் தாக்குதலில் 26ஆயிரம் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். ஐ.நாடுகள் சபை கண்டித்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுக்கிறது. எனவே, இஸ்ரேலை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்தக் கோரி யும், இரண்டு நாடுகள் என்ற தீர்வை அமல்படுத்த வலியுறுத்தியும் ஆக.6ந் தேதி சென்னையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த போராட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும்,வெகு மக்கள் அமைப்புகளின் தலைவர்களையும் அழைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.