districts

img

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக மோடி அரசின் விவசாய, தொழிலாளர் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து சிஐடியு, விவசாய, விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில் திருவள்ளூரில் திங்களன்று (பிப். 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், விதொச மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜே.ராபர்ட் எபிநேசர், எஸ்.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் என்.நந்தகோபால் தலைமையில் காஞ்சிபுரம் காவலன்கேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன், செயலாளர் கே.நேரு, பொருளாளர் வி.கே.பெருமாள், துணை செயலாளர் டி.லிங்கநாதன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஒய்.சீதாராமன், கைத்தறி சங்க மாவட்டச் செயலாளர் வி.சிவப்பிரகாசம், ஆர்.இந்திரா, எம்.அம்பிகா பி.கேசவன் உள்ளிட்ட பலர் பேசினர்.