districts

img

நிவாரணம் கோரி செம்மஞ்சேரி மக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 4 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதி வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 5ஆயிரம் ரூபாய் நிவாரணம் கேட்டு அப்பகுதி மக்கள் சனிக்கிழமையன்று (டிச.4) செம்மஞ்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மழைநீர் கால்வாயில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து  மழைநீர் கால்வாய் களை சீரமைக்க வேண்டும், பெரும்பாக்கம் பகுதியில்  உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி 100 படுக்கைகள் கொண்ட ஒரு பொது  மருத்துவமனையாக மாற்ற வேண்டும்,  பெரும்பாக்கம் பகுதியில் போக்கு வரத்து வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சோழிங்கநல்லூர் பகுதி தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது இந்தப் போராட்டத்தில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயற்குழு உறுப்பினர் தீ. சந்துரு, பகுதிச் செயலளார் சரத், நிர்வாகிகள் சூர்யா, பரணி, நித்தியா, விக்கி உள்ளிட்டோர் பேசினர்.