தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆய்வக நுட்பனர்களை (லேப் டெக்னிஷியன்ஸ்) காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (மார்ச் 25) தமிழ்நாடு முழுவதும் ஆய்வக நுட்பநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர்கள் த.ஏழுமலை, ஆ.கோபிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.