districts

img

கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், மார்ச் 16- தமிழ்நாடு முழுவதும் அரசு கலை கல்லூரிகளில் கவுர விரிவுரையாளர்களாக ஆயிரக்கணக்கானோர் குறைந்த ஊதி யத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி யாற்றி வருகின்றனர். இவர்கள் தங்க ளுக்கு பணி நிரந்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரு கின்றனர். இந்த நிலையில், மார்ச் 14 அன்று அரசு கல்லூரியில் உள்ள நான்காயிரம் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது. இதில், நீதிமன்றத்தில் பணி நிரந்தரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அரசின் இந்த அறிவிப்பு நீதிமன்ற அவ மதிப்பு செயலாகும்.  கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு கல்லூரியில் மிகக் குறைந்த ஊதி யத்தில் பணி செய்து வரும்  கௌரவ விரிவுரையாளர்கள் 4000 பேர் பணி இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கவுரவ விரிவுரையாளர்களை கருணை இல்லாமல் பணி நீக்கம் செய்யும் உதவி பேராசிரியர் நியமன அறிவிப்பினை ரத்து செய்ய வலியுறுத்தியும், பல ஆண்டு களாக போராடி வருகின்ற கவுரவ விரிவுரை யாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்ணதாசன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இள வரசன், சுதாகர், புவனேஸ்வரி, சுமித்ரா, இந்திரா தேவி கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.