இஸ்ரேலுக்கு கட்டுமான தொழிலாளர்களை அனுப்பும் அரியானா மாநில அரசை கண்டித்தும், 15,000 இந்திய கட்டுமான தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் ஒன்றிய அரசு அனுப்ப முயற்சிப்பதை கைவிட வலியுறுத்தியும் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்ட செயலாளர் ஏ.பழனியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.