districts

img

காட்பாடியில் ஆர்ப்பாட்டம்...

மேம்பாலம் பராமரிப்பு பணிகளுக்காக காட்பாடி ரயில்வே மேம்பாலம் நிலையம் மூடப்பட்டதால் பழைய காட்பாடி வழியாக ஒரு பாதை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் ஏற்பட்டுள்ள சிரமங்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கொண்டு வரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டச் செயலாளர் ஆர்.சுடரொளியன் தலைமையில் சித்தூர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் பெ.திலீபன் துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி நிறைவு செய்து பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பார்த்திபன், கணேஷ், பழனியப்பன், தருமன், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.