districts

பஞ்சமி நில ஆக்கிரமிப்பை மீட்க கோரிக்கை

திருவண்ணாமலை, பிப். 5- திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டி யல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் மற்றும் மயான இடம் ஆக்கிர மிப்பை மீட்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் ச.கருப்பையா மனு அளித்தார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவசமாக பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டது. அதில் சுமார் 33 ஆயி ரத்து 324 ஏக்கர் பஞ்சமி நிலம் அரசின் புள்ளி விவரப்படி தனி நபர்களால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. தண்டராம்பட்டு வட்டத்தைச் சேர்ந்த மல மஞ்சனூரில் பஞ்சமி நிலத்தில் பேருந்து நிழற்குடை, ஆரம்ப சுகாதார நிலை யம், கிரானைட் குவாரிகள் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை நகரம் தேனி மலை, தண்டராம்பட்டு வட்டம் கொழுந்தம்பட்டு, வந்தவாசி வட்டம் கீழ் சாத்தமங்கலம், செங்கம் வட்டம் கொட்டகுளம், தண்டராம்பட்டு வட்டம் வாணாபுரம், செங்கம் வட்டம் பெரிய பாலியப்பப்பட்டு உள்ளிட்ட கிராமங்க ளில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், நிலங்களை மீட்க மாவட்ட வருவாய்த்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டியலின மக்களுக்கு நிலங்களையும், மயானங்களையும் மீட்டுத்தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.