நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்பப்பெறக்கோரிசிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலூர் ரங்காபுரம் போக்குவரத்து மண்டல அலுவலகம் முன்பு தொமுச செயலாளர் தா.ரமேஷ் தலைமையில் கோரிக்கை விளக்ககூட்டம் நடைபெற்றது. எஸ்.பரசுராமன், கே.ரவிச்சந்திரன் (சிஐடியு), கே.ஆர்.சுப்பிரமணி, பாலகிருஷ்ணன் (தொமுச), போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் சவுந்தரராமன் ,ராமதாஸ் (ஏஐடியுசி), தமிழச்செல்வன் (டிடிஎஸ்எப் ), சிகாமணி(எச்எம்எஸ்), இளவரசன் (எம்எல்எப்) ஆகியோர் இதில் பேசினர்.