விழுப்புரம், ஜூலை 31-
விழுப்புரம் மாவட்டத்தில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில், விழுப்புரம் அருகே ஏனாதி மங்கலத்தில் செயல்பட்டு வந்த மணல் குவாரி திடீரென மூடப்பட்டது. அதை நம்பியிருந்த சுமார் 1200 லாரி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனால், மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.