கடலூர், நவ.21- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2024 பணியில் சேர்ந்த 12 பருவ கால பணியாளருக்கு ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் பணிநிரந்தரம் செய்யக்கோரியும் கடலூர் மாவட்டம், செம்மண்டலம் நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழி லாளர் சங்கம் சிஐடியு வின் மண்டல தலைவர் ஆர்.இளங்கோ தலைமை தாங்கி னார். மாநில பொதுச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், மண்டல செய லாளர் ஜி. சுதர்சன் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். துணைத்தலைவர்கள் ஜி.சங்கர், எஸ்.பீமாராவ் பாபுஜி, எம்.தினகர், எஸ்.பிரபாகர், துணைச் செயலாளர்கள் பி.ஸ்டாலின், பி.சந்தோஷ் குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மண்டல பொருளாளர் ச.கலைவாணன் நன்றி கூறினார். கொள்முதல் பணியில் என்சிசிஎப்ஐ அனுமதிப்பதை சிஐடியு கண்டித்துள்ளது. பொது விநியோகத்தை பலப்படுத்தி, பொது விநியோகத்தில் உள்ள குறைகளை அகற்ற வேண்டும். இண்டேன் எரிவாயு ஊழி யர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். நவீன அரிசி ஆலையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியருக்கு குறைந்தபட்சமாக 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 72 பருவகால ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.