districts

img

முந்திரிக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்

கடலூர், ஜூலை 29- முந்திரி கொட்டை மூட்டைக்கு ரூ.15 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயி கள் சங்க மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட 24ஆவது மாநாடு குறிஞ்சிப்பாடியில் மாவட்டத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மகா லிங்கம் சங்கக் கொடியை ஏற்றினார். வரவேற்புக் குழு பொருளாளர் எம்.வெங்க டேசன் அஞ்சலி தீர்மா னத்தை வாசித்தார். அகில இந்திய துணைத் தலை வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பால கிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் வேலை அறிக் கையையும், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைச் செயலாளர் கோ.மாதவன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலத் தலைவர் சுப்பிரமணி யன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வரவேற்புக் குழு செயலாளர் ஆர்.கே.சர வணன் வரவேற்றார். வரவேற்புக் குழு தலைவர் ஆர்.மெய்யழகன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

வேளாண் விலை பொருட்களுக்கு கட்டுப்படி யான ஆதார விலையை உறுதிப்படுத்த நாடாளு மன்ற கூட்டத்தொடரில் உரிய சட்டம் இயற்ற வேண்டும், என்எல்சி நிறு வனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்கி, வீடு கட்டிக் கொள்ள இடம், அந்த இடத்திற்கான பட்டா உரிய முறையில் வழங்க வேண்டும். ஒரு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு நிர்ண யிக்க வேண்டும். மாவட்டத் தில் உள்ள முந்திரி விவ சாயிகளை பாதுகாக்கும் வகையில் முந்திரிக்கு ஒரு மூட்டை ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மாவட்டத்தி லுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் நிலவும் உரம், யூரியா தட்டுப்பாடை போக்க வேண்டும். அனைத்து சமய நிலங்க ளில் பயிர் செய்வதை பாது காக்க வேண்டும், பண்ருட்டி வட்டம், திருமுட்டம் வட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அரசு கொள்முதல் நிலை யத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். மாவட் டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள், வாய்க்கால் களை ஆழப்படுத்தி தூர்வாரி விவசாயிகளின் பாசன ஆதாரத்தை உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல், செம்மண் குவாரிகளை முறைப்படுத்த வேண்டும், என்எல்சி நிறு வனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைந்தால் விவ சாயிகளின் 2,500 ஏக்கர் நிலமும் உள்ளிட்ட 26 கிராம மக்களும் பாதிக் கும். எனவே  இத்திட் டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள்

மாவட்டத் தலைவராக ஜி.ஆர்.இரவிச்சந்திரன், செயலாளராக ஆர்.கே.சரவணன், பொருளாள ராக ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 33 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.