districts

img

சிபிஎம் மாநில மாநாட்டு பிரச்சாரம் துவக்கம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பகத்சிங் நினைவு நாளான புதனன்று  மாநாட்டு கொடி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலை போளூர் சாலையில், 23 கொடிகளுடன் அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் செங்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நகர செயலாளர் எம்.பிரகலநாதன்  மற்றும் நகர குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


பகத்சிங் நினைவு தினத்தையொட்டியும் சிபிஎம் மாநில மாநாட்டை முன்னிட்டும் ஓசூர் சிபிஎம் அலுவலகம், தாலுகா அலுவலகம், மத்திகிரி, மிடுகரப்பள்ளி, சீதாராம் நகர் உள்ளிட்ட பல இடஙகளில்  செங்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வுகளில் கட்சியின் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி,ஓசூர் ஒன்றிய செயலாளர் ராஜாரெட்டி, மாநகர, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெண்ணிலா,  நாகேஷ் பாபு, ரவி, எம்.எம் ராஜூ, திம்மாரெட்டி, எஸ்.ஆர்.ஜெயராமன்,சேதுமாதவன், வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.