சென்னை, ஜூலை 9 -
அச்சக தொழிலுக்கான மூலப் பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அச்சக தொழில் புரி வோர் சங்கத்தின் 3வது ஆண்டு பேரவை சிந்தாதிரிப்பேட்டையில் ஞாயிறன்று (ஜூலை 9) நடைபெற்றது.
இந்த பேரவையை தொடங்கி வைத்து பேசிய நக்கீரன் கோபால், “அச்சக தொழிலில் 15 லட்சம் பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் கடும் தொழில் நெருக்கடி ஏற்பட்டது. மூலப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. இதனால் அச்சக தொழிலில் தேக்கம் ஏற்பட்டது. இந்த தொழி லில் உள்ளவர்கள் சராசரி வாழ்க்கை யைத்தான் வாழ்கின்றனர்.
அச்சு தொழில் நடத்துவோர், பணிபுரிவோர் என இணைந்து அமைப்பாக ஒன்று திரளும் சூழல் உருவாகி உள்ளது. அச்சக தொழிலில் உள்ளவர்களின் பிரச்சனைகளை தீர்க்க தொழில்துறை அமைச்சரை சந்தித்து முறையிடுவோம்” என்றார்.
காகிதம், மை, கெமிக்கல்ஸ் போன்ற மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த வட்டியில் தொழில் முதலீட்டு கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும், மானிய விலையில் மின்சாரம் தர வேண்டும், இந்த தொழிலில் உள்ளவர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரவைக்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் தி.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பேரா.சுந்தரவள்ளி, சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். சையத் அலி கோயா, பொருளாளர் ஏ.ஜோசப் செல்வம், துணைச் செயலாளர் கே.மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் டி.ஏ.ஜான்சன் உள்ளிட்டோர் பேசினர்.
சங்கத்தின் தலைவராக தி. ஜெய்சங்கர், பொதுச் செயலாளராக எம்.சையத் அலி கோயா, பொருளாளராக ஏ.ஜோசப் செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.