districts

சென்னை முக்கிய செய்திகள்

மணலி - எண்ணூர் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை மேம்படுத்த அரசு புதிய திட்டம்

சென்னை, ஜன. 16- மணலி - எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில், மாசு கழிவுகள், பறக்கும் சாம்பல் வெளியேற்றம் மற்றும் நீர்நிலைகளில் நீரின் தரத்தை கண் காணிக்க, மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையத்தை  அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக மணலி, எண்ணூர் பகுதியில் பிரத்யேகமாக இரண்டு பறக்கும் படைகள் நிறுத்தப்படும். மேலும் மாசு கண்காணிப்பு மற்றும் கட்டளை மையம், ஒரு  அவசரகால நடவடிக்கைக் குழுவை அமைக்கும். இது வழக்க மான மாதிரி பயிற்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்யும். மேலும் அனைத்து சிவப்பு வகை தொழிற்சாலைகளின் பாதுகாப்பு தணிக்கையை, தொழில் பாதுகாப்பு இயக்கு நரகம், நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் மேற்கொள்ளும். கத்திவாக்கத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 10 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இருந்து சாம்பல் அணைக்கட்டுக்கு, ஈரமான சாம்பலை எடுத்துச் செல்லும் குழாய்கள் புதுப்பிக்கப்படும். எண்ணூர் கழிமுகத்தில் உள்ள சதுப்பு நிலங்களை புனர மைக்கும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. அமோ னியா வாயு கசிவு குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணூர் - மணலி பகுதியில் தொழில்சார் திறன் தேவை களை கண்டறிந்து இளைஞர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப, தலைசிறந்த நிறுவனங்களுடன் இணைந்து பயண ஊக்கத் தொகையுடன் கூடிய கட்டணமில்லா திறன் பயிற்சி வழங்கப் படும். வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான விரிவான செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அலட்சியத்தால் தொடரும் உயிரிழப்புகள்

புதுச்சேரி,ஜன.16- சின்னஞ்சிறு பிரதேசமாக உள்ள புதுச்சேரி மாநிலம் சுற்றுலாதளத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. வாரத்தில்  கடைசி மூன்று நாட்கள் புதுச்சேரி நகரத்தை சுற்றுலா வாசிகளே அதிக அளவில் காணப்படுவார்கள். புதுச்சேரியில் எண்ணற்ற சுற்றுலா தளங்கள் இருந்தாலும், அனைவரது கண்களுக்கும் தெரிவது அழகிய கடற்கரையே. இந்த அழகிய கடற்கரையை  சுற்றுலா வாசிகள் பார்த்த உடனே கடலில் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். குழந்தைகள்,பெரியவர்கள் கடலில் குளித்து மகிழ்வார்கள். கடற்கரை ஓரங்களில்  எச்சரிக்கை பலகை இருந்தும் சுற்றுலாவாசிகள் அதனை பொருட்படுத்தாமல் கடலில் குலித்து மகிழ்வதால், எதிர்பாராத சில நேரங்களில் கடல் அலையின் சீற்றத்தால் உயிரிழப்புகள்  தற்போது தொடர் கதையாகி வருகிறது. பொங்கல் பண்டிகை  விடுமுறைக்கு   கோவை மாவட்டத்தில் இருந்து   சுற்றுலா வந்த  9 இளைஞர்கள் திங்கள்கிழமை (ஜன-16) புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது வினோத், அசோக் என்ற இரண்டு  வாலிபர்கள்  திடீரென பேரலை யில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதில் ஒருவரது சடலம் பழைய சாராய ஆலை பின்புறம் செவ்வாயன்று மீட்கப் பட்டது. மற்றொருவரை போலீசார் மற்றும்  மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். இதேப்போல் கடந்த டிசம்பர் 31 அன்று கடலில்  குளித்து கொண்டிருந்த போது புதுச்சேரியை சேர்ந்த  4 சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

தீர்த்தவாரி கடற்கரையில்  கரை ஒதுங்கிய கற்சிலைகள்

விழுப்புரம், ஜன. 16- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீர்த்தவாரி கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த மாதம் 3 கற்சிலைகள் கரை ஒதுங்கியது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அந்த சிலைகளை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு திங்களன்று (ஜன. 15) தீத்தவாரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வருகை தந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த கடலோர காவல் படையினர் கடற்கரை யோரம் 2 அடி உயரமுள்ள இரண்டு கற்சிலைகள் இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அவர்கள் தகவல் அளித்தனர். அதிகாரிகள் வந்து இரண்டு கற்சிலை களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தீர்த்தவாரி கடற்கரையில் தொடர்ந்து கற்சிலைகள் கண்டெடுக்கப்படுவது பொது மக்களிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து அதி காரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசார ணைக்கு பிறகே கற்சிலைகள் எப்படி கரையோரம் வரு கிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

குடிநீரில் கழிவு நீர்

கள்ளக்குறிச்சி, ஜன.16- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நக ராட்சிக்குட்பட்ட உளுந்தூர் காலனி, 5ஆவது வார்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் இந்த விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை நகராட்சி அதி காரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நட வடிக்கை எடுக்கவில்லை என்றும், இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை யுடன் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி யாக தலையிட்டு சுகாதாரமான குடிநீரை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.