ஒன்றிய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது பல்வேறு தலைவர்களின் கண்டனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், தில்லியில் உள்ள ஸ்மிருதி இரானியின் வீட்டு முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் வியாழனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘பாஜக-வின் போக்கிரித்தனத்தை நாடாளுமன்றம் கண்டது. பாஜக எம்.பி.க்கள், சோனியா காந்தியுடன் சேர்த்து நாட்டின் கோடிக்கணக்கான பெண்களை அவமதித்துள்ளனர்’ என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் குற்றம் சாட்டினார்.