districts

img

அர்பணிப்போடு பணியாற்றி மறைந்த தோழர் ஏ.முனுசாமி நினைவு தினம்

சென்னை, அக். 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் மேற்கு கிளை முன்னாள் செயலாளர் ஏ.முனுசாமியின் 15வது ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று (அக்.1) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தாம்பரத்தில் நினைவு தினக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ஏ.முனுசாமியின் உருவப்படத்திற்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ஜி.செந்தில்குமார், பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, மூத்த தலைவர்கள் ஆர். கிருஷ்ணமூர்த்தி, கு. ராஜன்மணி, ஆ.கோ. ஜெயவேல், கிளைச் செயலாளர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அவசர நிலைக் காலத்தில் தாம்பரம் பகுதியில் இருந்து 3 பேர் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ஒருவர் தோழர் ஏ.முனுசாமி.  துறைமுகத்தில் பணியாற்றிய அவர், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டார். கட்சிக்கு சொந்தமான பி.எஸ்.தனுஷ்கோடி நினைவகம் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க அலுவலகம்)  மற்றும் சில இடங்களை ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுத்தவர். மக்கள் நலனுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியவர். பல்வேறு இழப்புகளை சந்தித்த போதும், கட்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்போடும், தியாகத்தோடும் பணியாற்றினார் என்று தலைவர்கள் புகழாரம் சூட்டினர். இந்த நிகழ்வில் மாநிலச் செயற்குழு க.கனகராஜியிடம், தாம்பரம் பகுதிக்குழு சார்பில் முதல்தவணையாக 43 தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா வழங்கப்பட்டது.