districts

img

திருக்கோவிலூர் தெப்பக்குளம் சீரமைப்பு பணி

கள்ளக்குறிச்சி ஆக.23- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டத்தில் ‘உங்களை தேடி  உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது, பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் நிதியின் கீழ்  ரூ.3.50 கோடியில் நடை பெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, சீர மைப்பு பணிகளை விரை வாக முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார். கிராமத்தில் தங்கிய ஆட்சியர் முதல் நாள் இரவு கிரா மத்தில் தங்கிய ஆட்சியர், எல்ராம்பட்டு, திருக்கோவி லூர் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை மாணவர் களின் எண்ணிக்கை, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவுப், பொருட்கள் இருப்பு, அடிப்படை வசதி கள், விடுதியில் பராமரிக் கப்பட்டு வரும் பதிவேடு கள் உள்ளிட்ட பல்வேறு தக வல்கள் குறித்து கேட்டறிந் தார்.