விழுப்புரம், செப்.7- வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் முன், கோலியனூரான் வாய்க்காலை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பக்கவாட்ட பகுதி யில் இருந்து சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை வழியாக கோலியனூரான் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் தண்ணீர், மருதூர் ஏரி மட்டுமின்றி கண்டியமடை, வள வனூர் உள்ளிட்ட 6 ஏரிகளுக்கு செல்கிறது. நகரின் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கோலிய னூரான் வாய்க்காலில் கலக்கிறது. இப்படியிருக்க இந்த வாய்க்காலை அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்தி னர் முறையாக தூர் வாரி சீரமைப்ப தில்லை. இதன் விளைவாக கோலிய னூரான் வாய்க்காலில் எங்கு பார்த்தாலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியின்றி குட்டை போல் தேங்கியுள்ளது. குவிந்து கிடக்கும் குப்பைகள் குறிப்பாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய கோலியனூரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பை கள் அதிகளவில் குவிந்து கிடப்ப தால் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியின்றி குட்டை போல் தேங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர், அவ்வப் போது இந்த வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து தண்ணீர், தடை யின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். ஆனால் அப்பணியை செய்ய நகராட்சி நிர்வாகம் தவறுவ தால் அங்கு கடை நடத்தி வரும் பலரும் குப்பைகளை, கோலிய னூரான் வாய்க்காலில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்ற னர். அதுமட்டுமின்றி சில குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர், இந்த கோலியனூரான் வாய்க்காலில் கலக்கிறது. ஆனால் வாய்க்காலை தூர்வாரி சீரமைக்காததால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் அவ்வாறு தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொது மக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் அருகில் உள்ள குடி யிருப்புகளில் வசிக்கும் பொது மக்கள், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கோலியனூரான் வாய்க்கால் தூர் வாரி சீரமைக்கப் பட்டது. அதன் பிறகு தொடர்ந்து வாய்க்காலை அவ்வப்போது தூர்வார நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதன் விளைவு தற்போது கோலியனூரான் வாய்க்காலில் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவசர கதியில் வாய்க்காலை தூர்வாரியதும், அதன் பிறகு அவ்வப்போது தூர்வாராமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியப் போக்குடன் இருப்பதாக வும் நகர மக்கள் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். வரும் பருவ மழை காலத்திற்குள் கோலியனூரான் வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி விட்டு வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த வாய்க்காலில் மீண்டும் குப்பை கள் கொட்டாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் கழிவு நீர் விழுப்புரம் நகராட்சியில் உள்ள தாழ்வான பகுதியில் தேங்கி நிற்கும் அவல நிலைக்கு தள்படுவதோடு, மர்ம நோய்கள் பரவும் அபாயம் ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.