districts

img

கூட்டுறவு துறை செயலர் ஆய்வு

திருவண்ணாமலை,ஆக.17- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பெரிய வளாகத்திலுள்ள, மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் கூட்டுறவு துறை சார்பில் கூட்டுறவு உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் துறை ரீதியான அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் 226 பயனாளிகளுக்கு ஒரு கோடி 84 லட்சத்து 23 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமபிரதீபன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன், மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் ஜெயம் பொது மேலாளர் விஜயபானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.