districts

பி.எம்.டபுள்யூ தொழிலாளர்கள் பிரச்சனையில் அரசு தலையிட சிஐடியு வலியுறுத்தல்

 செங்கல்பட்டு, ஆக. 12-  தொழிற்சாலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பி.எம்.டபுள்யூ தொழிலாளர் பிரச்சனையில் அரசு தலையிடவேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது . செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் செயல்பட்டு வரும் பி.எம்.டபுள்யூ கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் 150  தொழிலாளர்கள் பணி செய்து வருகின்ற னர். இந்நிலையில்வேலைத்தளத்தில் வேலை நேரத்தை தன்னிச்சையாக நிர்வாகம்  தீர்மானிப்பதை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை தாமதமின்றி பேசி தீர்வுகாண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எம்.டபுள்யூ தொழிலாளர்கள் ஒரு வாரமாக ஆலை வாயிலில் காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திங்களன்று (ஆக.12) பி.எம்.டபுள்யூ  தொழிற்சாலை வாயில் முன்பாக நடைபெற்ற  கூட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் கே.சேஷாத்திரி, மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், பிஎம்டபிள்யூ தொழிலாளர்  சங்கத்தின் கவுரவத் துணைத் தலைவர் நடராஜன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்  பி.சண்முகம் உள்ளிட்ட பலர் பேசினர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பிஎம்டபிள்யூ தொழிலாளர்களின் கோரிக்கையை சுமுக மாக பேசி தீர்க்க அரசு முன்வர வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.