districts

img

இலுப்பூர் இருளர் இன மக்களுக்கு குடிமனைப்பட்டா கிடைத்தது

திருவள்ளூர், அக் 10- இலுப்பூரில் வசிக்கும், இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கப் பட்டதை  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர். திருத்தணி வட்டம், இலுப்பூர் ஊராட்சிக்கு  உட்பட்ட பழங்குடி இருளர் இன மக்கள் சுமார் 27 குடும்பங்கள் ஏரிக்கரையின் மீது குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தனர். அம்மக்களுக்கு பட்டா கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கடந்த  ஜூலை 9 அன்று திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகம் முன் காத்திருக்கும் போராட்டம்  நடைபெற்றது. அப்போது போராட்டத்தின் இறுதியில் கோட்டாட்சியர்  எழுத்துப்பூர்வ மாக இரண்டு மாதங்களில் பட்டா வழங்கப் படும் என்று உத்தரவாதம் கொடுத்தார். அதன் அடிப்படையில் அக்  9 அன்று திருவள்ளூர் மாவட்டம், ஆவடிக்கு தமிழ்நாடு  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அந்த நிகழ்ச்சியில் திருத்தணியை அடுத்த இலுப்பூர் ஊராட் சிக்கு உட்பட்ட இருளர் இனத்தை சேர்ந்த   27 குடும்பங்களுக்கும் குடிமனை பட்டாக்களை வழங்கினார்.  இது தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு கூறியுள்ளார். பட்டா வழங்க நடவடிக்கை எடுத்த  மாவட்ட நிர்வாகத்தின் பணியை அவர் பாராட்டியுள்ளார்.