districts

சென்னை முக்கிய செய்திகள்

கடலூர் அருகே குளத்தில் மூழ்கிய சிறுவர்கள்  2 பேர் பலி

கடலூர், டிச.31-  கடலூர் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திருப்பாதிரிப் புலியூர் நத்தவெளி பகுதி யில் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஐந்து சிறுவர்கள் செவ்வாய்க்கிழமை (டிச.31) குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கினார்கள். அப்போது மற்றொரு மூன்று சிறுவர்கள் குளத்தில் இருந்து நீந்தி அந்த பகுதியில் இருந்த பொது மக்களிடம் தெரி வித்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக குளத்தில் இறங்கி தேடிப் பார்த்தபோது இரண்டு சிறுவர்கள் மயங்கி நிலையில் இருந்தனர். இதனை தொடர்ந்து இரண்டு சிறுவர்களை மீட்டு முதலுதவி செய்து, கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்த நிலையில் சிறுவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார்  விசாரணை நடத்தியதில் அரிசி பெரி யாங்குப்பம் சேர்ந்த ஸ்ரீஹரன் (வயது 13) தனி யார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த மற்றொரு சிறுவன்   சரவண பாலாஜி (11) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புறநகர் ரயில் சேவை இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும்

சென்னை, டிச.31- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல் பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரயில் சேவையை மாற்றம் செய்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.