சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அதிகாரபூர்வ இலச்சினையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், மேயர் பிரியா, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.