சிதம்பரம், நவ.26- கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், திட்டக்குடி, தொழுதூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், புவன கிரி ஆகிய பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதில் சேத்தியாத்தோப்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 17 செ.மீ. மழை பதி வாகியது. இதனால் வெள்ளாற்றில் நீர்வரத்து அதிகரித்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு தனது முழு கொள்ளளவான 7.5 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு நீர் வந்த வண்ணம் உள்ளதால் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவினர் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்தனர். அணைக்கட்டில் 20 மதகுகள் உள்ளன. இதில் 4 மதகுகளை மட்டும் திறந்து வினாடிக்கு 600 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. மேலும், கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரு வது வீராணம் ஏரியாகும். 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப் படும் இந்த ஏரி 5 கிலோ மீட்டர் அகலம் உடை யது. ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடியில் 46 கன அடியை கடந்த சில தினங்களுக்கு முன்பாக எட்டியது. தற்போது பெய்த மழையில் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி யின் வி.என்.எஸ்.எஸ். மதகு, பாழ் வாய்க்கால்கள் மூலம் தலா 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு வழியாகவும் 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர் அனைத்தும் பல்வேறு வாய்க்கால்கள் வழி யாக பரங்கிப்பேட்டைக்கு சென்று வங்கக் கடலில் கலக்கிறது. நீர்வரத்தை பொறுத்து சேத்தியாத் தோப்பு அணைக்கட்டு, வீராணம் ஏரி யில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு கூடுதலாவதற்கு வாய்ப்பு உள்ள தாக செயற்பொறியாளர் அடைக்காப்பான் கூறினார். மேலும், வெள்ளாற்று கரை யோரம் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கூறினார்.