சென்னை, ஆக. 22-
சந்திரயான் - 3 விண்க லம் புதனன்று (ஆக. 23) நிலவில் இறங்குவதை முன்னிட்டு சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியின் உயர் வகுப்பு மாணவர்கள் 2,000 பேர் பங்கேற்று பல்வேறு விதங்களில் நிலவு தொடர் பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பள்ளி மைதானத்தில் 10,000 சதுரஅடி பரப்பில் மாணவர்கள் நிலவுபோல் வடிவமைத்தனர். 7 அடி உய ரம் 4 அடி அகலம் கொண்ட நிலவில் தடம் பதிக்கும் விக்ரம் லேண்டரை தத்ரூப மாக அமைத்தனர். அதே போல் 14 அடி உயரம் 7 அடி அகலம் கொண்ட சந்திர யான் - 3 ராக்கெட் நிறுத்தப் பட்டிருந்தது.
நிலவின் மேல் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப் பட்டிருந்தது அனைவரை யும் வெகுவாகக் கவர்ந்தது. 200 மாணவிகள் விக்ரம் லேண்டர் டீ சர்ட் அணிந்து தங்கள் முகத்தையே நிலவு போல வர்ணம் பூசி அசத்தினர்.
நிகழ்ச்சியில் எவர்வின் பள்ளிக் குழும சி.இ.ஓ. மகேஸ்வரி, முதல்வர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்